இந்த ஆண்டு 2018 அக்டோபர் 6-ம் தேதி நேற்று கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு அர்ஜண்டினாவில் பியூனியஸ் அயர்ஸில் ஆரம்பம் ஆனது. இதில் 15 முதல் 18 வயது உடைய விளையாட்டு வீரர்கள் அதிகமாக கலந்துகொண்டார்கள் . 200 மேற்பட்ட நாடுகள் இதில் பங்கு கொள்கின்றன .
இந்த கோடைகால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு இதுதான் முதல்முறையாக ஆசியாவுக்கு வெளியே நடைபெறும் முதல் கோடைகால ஒலிம்பிக், அதுமட்டும் இல்லாமல் யுரேசியாவை விட்டு வெளியே நடைபெறும் முதல் குளிர்கால அல்லது கோடைகால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். கடந்த ஒலிம்பிக் 2010ம் ஆண்டு சிங்கப்பூரிலும் 2014 ம் ஆண்டு சீனாவின் நான்ஜிங் மாகாணத்திலும் நடைபெற்றது .
இந்த கோடைகால ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியாவில் இருந்து 47 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விளையாட்டு 18 தேதி முடிவடைகிறது. அன்று ISSF ஜுனியர் மற்றும் ஜீனியர் உலக கோப்பை சேம்பியன் "மனு பார்க்கர்" காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மெஹலி கோஷ் , உலா இளைஞர்கள் குத்துசண்டை சேம்பியன் ஜோதி குளியா மற்றும் இளைஞர் வெள்ளி பதக்கம் வென்ற ஜெர்மி லால்ரினுங்க கலந்து கொள்கிறார்கள்





No comments:
Post a Comment