புதுவை :
தீபாவளி பரிசுப்பொருட்களுக்காக ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுபொருட்டாகள் மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்கும். இந்த ஆண்டு ஒரு புதிய மாற்றமாக ஒவ்வொரு குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 பணமாக வழங்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு காலதாமதம் ஏற்பட்டதாலே இவ்வாறு வழங்கவேண்டும் என்று முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. முதலமைச்சர் அதை ஏற்றுக்கொண்டார். இது தெடர்பாக சட்டசபையில் முடிவெடுக்கப்படும் என்கிறார்.
புதுவையில் மொத்தம் 3 இலட்சத்து 42 ஆயிரத்தது 481 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் நிற ரேஷன்கார்டுகள் 1 இலட்சத்து 64 ஆயிரத்து 945. ஆகும். அவர்களுக்கு தலா ரூ,675 மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment